Dr Venkatesh Swami - ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய கேள்வி பதில்கள்! | Basics of Srivaishnava Sampradayam
Sri U ve Dr Venkatesh Swami answers questions from viewers on Srivaishnava Sampradayam!
இப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்!
சனாதன தர்மத்திற்கு ஆணி வேர் பகவத் கீதை. ஆனால் கீதை என்றால் பலரும் அருகே போக பயப்படுகிறார்கள். அந்த பயத்தை எப்படி போக்குவது. ஒரு சாமானியன் கீதையின் கருத்துக்களை எப்படி புரிந்து உணர்ந்து நடந்து கொள்வது?
விசிஷ்டாத்வைதம் - பெயர் காரணம், அர்த்தம், மற்ற மதங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது? அனைத்து வைஷ்ணவ மதங்களும் விஷிஷ்டாட்வைத மதங்களா?
எம்பெருமானிடம் சரணாகதி செய்த பிறகும் தவறுகள் செய்கின்றோமே. அவற்றை எம்பெருமான் மன்னிப்பாரா?
பகவானின் அவதாரங்கள் எத்தனை? தசாவதாரம் மட்டும் தானா? ஹம்ஸாவதாரம் ஹயக்ரீவ அவதாரம் போன்ற பல அவதாரங்களை பற்றி பார்க்கிறோமே?
பகவான் திருமுன்பு விளக்கு ஏற்றி கோலம் போட வேண்டும். ஏன் ? சில நாள்கள் தளிகை சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் என்ன செய்யலாம்?
ஸ்ருஷ்டி பிரளயம் எப்படி நடக்கிறது? ப்ரலயம் ஆன பிறகு ஆத்மாக்கள் எங்கு இருக்கும்?
சர்வ ஷாகா ப்ரத்யய நியாயம் வேதாந்தத்தைப் போல் புராணங்களில் நாம் பொருத்தி பார்பதில்லையே ஏன் ?